Monthly Archives: May 2015

வீட்டுக்கு வீடு பன்னிரு திரளை உப்பு மருத்துவம்

thiralai_book2.PNG

நூல் : வீட்டுக்கு வீடு பன்னிரு திரளை உப்பு மருத்துவம்

ஆசிரியர் : கு. பூங்காவனம்

வெளியீடு : தாமரை பதிப்பகம், சென்னை : தொலைபேசி :044-26258410

இந்நூலைப் பற்றிய முன்னுரை மற்றும் சில கருத்துரைகளை கீழே காணலாம்

இந்நூல் பதிப்பகத்தார்க்குக் காப்புரிமை உடையது. நூலின் படியைப் பெற பதிப்பகத்தாரைத் தொடர்பு கொள்ளவும்.

ஓமியோபதி மருத்துவ நெறிமுறை -The Organon of Medicine

organon_book.PNG

நூல் : ஓமியோபதி மருத்துவ நெறிமுறை
மொழி பெயர்ப்பு : மரு. கு. பூங்காவனம்

ஆண்டு : 2013
விலை : உரு. 300/-
வெளியீடு : வேங்கை பதிப்பகம், மதுரை.  தொலைபேசி : +91 94439 62521

இந்நூல் முழுவதையும் இங்கே படிக்கலாம்

மன மருத்துவமும் மலர் மருத்துவமும்

malar_book2.PNG

மன மருத்துவமும் மலர் மருத்துவமும்
(Heal Thyself and The Twelve Healers and other Medicines by Dr. Edward Bach)

ஆசிரியர் : எட்வார்டு பாச்
தமிழாக்கம்: மரு. கு. பூங்காவனம்
வெளியீடு : வேங்கை பதிப்பகம்,
80 ஏ, மேலமாசிவீதி, மதுரை – 1
94439 62521

இந்நூலை இங்கேயே படிக்கலாம்

வேண்டுமானால் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்
இங்கே சொடுக்கவும்

Healing with Flower Medicine

malar_book4.PNG Healing with Flower Medicine
By Dr. K. Poongavanam
Price Rs.120
Published by : Dr.Bach Healing Foundation, Bangalore

 

 

 

 

The following is a review of the book that appeared in The New Indian Express

Flower  Medicine  for  holistic  healing 

                Inspired by Dr.Edward Bach. A bacteriologist. Pathologist and homeopathic physician, the book  Healing wih Flower Medicine by  Dr. K.Poongavanam is a lucid collation of remedies for healing both spiritual and emotional conditions.

The author has come out with a detailed Materia Medica Flora that lists out the flower with its botanical name,  matchings with the type of person or situation, the method of usage and ultimately, he has drawn a complete sketch of each flower remedy.  However, the author has specifically mentioned that the original source books for such remedies must be read like the “The twelve Healers” by   Dr. Edward Bach so as to understand and build a wider Materia Medica.

Way back in the 1930s, Dr.Bach had opined that the dew found on floral petals retained healing properties of a particular  plant.  Although often labelled as homeopathic medicines as they are used by diluting in water,  strictly speaking, Dr.Bach’s remedies were truly not that as they were not following the basic tenets of Homeopathy.  Bach said, “Illnesses  were as a result of a conflict between the purposes of the soul and the personality’s actions and outlook.

The internal war lead to negative mood swings and to energy blocking, which caused a lack of harmony, thus, leading to physical diseases.”

Bach was satisfied with the method he had evolved either by boiling or nurturing in sunlight, because of its simplicity, and because it involved a process of combination of the four elements;  the earth to nurture the plant, the air from which it feeds, the sun of fire to enable it to impart its power, and water to collect and be enriched with its beneficent magnetic  healing.

Bach flower remedies are not dependent on the theory of sucessive dilutions, and are not based on the Law of Similars of Homeopathy.

The Bach remedies, unlike are all derived from non-toxic substances, with the idea that a “positive energy” can redirect or neurtalize “negative energy”.

“To understand the suffering human mind and to make use of the suitable flower remedy, we need to follow different strateges.  Studying mind in its opposite condition helps towards this end,” says Dr.Poongavanam.  He further says that to make best use of flower remedies, there is a need to adopt some techniques which will help us to understand, remember and recall those symptoms which are given against each of them.

For instance, Agrimony, it is brooding, restlessness, grieving silently, etc and for Clamatis, it is dreamy, drowsy, day dreaming, etc.   The book has highlighted seven groups as Dr. Bach has placed all his 38 remedies in seven groups.  They have been clubbed in accordance with their affinity or otherwise, with one another.

That way he made it possible ot comprehend them comparing and differentiating it with one another.  The seven groups, with their leading one line symptoms have been classified as:  fear, instability, disinterest, loneliness, oversensitive, despondencey and over care for welfare of others.

Apart from this, there is a combination of five flower remedies which is considered a saviour in the real sense.

The rescue remedy which is the best known flower remedy is the combination of an equal amount each of Rock Rose, Impatiens, Clematis, Star of Bethlehem and Cherry Plum remedies.

The product is aimed at treating burns, cuts, confusions, heamorrhages, stress, anxiety, and panic attacks, especially in emergencies.  The author concludes that this is remedy which if given at the right time can save life and definitely perform the function of a first aid remedy, in any condition.

A useful book, if properly understood and matched with the right person and group, however, do not try out this remedy on your own without expert help.

 _  Meera Bhardwaj
21, August 2012  –  CITY   EXPRESS  (THE  NEW INDIAN  EXPRESS)

You can find the original article here.

In case you have a problem with that link, you can find a printed copy of that article here.
Flower medicine for holistic healing- The New Indian Express

You can read the entire book here.

In case you wish to download, here is the download link.
Download

நமக்கு நாமே நலம் காண்போம்

namakku_book.PNGநமக்கு நாமே நலம் காண்போம் – மரு.கு.பூங்காவனம்;
பக்.136 ; ரூ.85;
தமிழ்மண் பதிப்பகம்;
சென்னை – 17;

 

தினமணி நாளிதழில் வெளியான நூல் மதிப்பீடு பின்வறுமாறு

நமக்கு ஏற்படும் உடல், மன நோய்களை வாராமல் தடுக்கவும், வந்தபின் நலமாக்கவும் என்ன செய்ய வேண்டும என்பதைக் கூறும் நூல், யோகப் பயிற்சிகள், மனதை சமநிலை தவறாது பாதுகாப்பது உடலுக்குத் தேவையான பொருத்தமான உணவு போன்றவற்றால் நோய்களைத் தவிர்க்க முடியும் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள விரிவான நூல். உடல், மனநலம் பேணுவது தொடர்பாக திருவள்ளுவர் கூறிய கருத்துகளையும் நூல் தொகுத்துக் கொடுத்துள்ளது. உடல் நலனில் அக்கறையுள்ள அனைவருடைய கைகளிலும் இருக்க வேண்டிய நூல்.

தினமணி – திங்கள்கிழமை, 31 மே, 2010

நூலின் சில பகுதிகள் தொகுத்தளித்தவர் : திரு. பு.மு. இராசராசன்

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

ஒவ்வொர் உயிரின் நன்மை தீமைகள் அவ்வுயிர் இடமளிக்காமல் மற்றவர் செய்து விடமுடியாது. இப்புத்தகத்தில் நமது நலனை நாமே போற்றி பாதுகாத்துக் கொள்வதுடன் உயர் ஆதனின் (Higer Self) தொடர்புடன் நாம் நமது வாழ்வின் உச்சத்திற்கு செல்வது எப்படி என்றும் மரு. பூங்காவனம் ஐயா அழகுற எடுத்து இயம்பியுள்ளார். ஆளுமை (Personality) ஆடாத மனம் அடங்கி உயர் ஆதனுடன் இயைந்து நடப்பின் பிணி போம், துன்பம் போம், வல்வினை போம்.

இதை டேவிட் பாச் அழகாக கூறுவர்:

“நாம் நமது மெய்யான இயற்கை தன்மையில் இயைந்து இசைபட உள்ளவரையில் நம்மால் பிணியுற்று வாழ இயலாது” – டேவிட் பாச்.

உணவுக்கு முன்னும், பின்னும் ஏன்? உணவாகவே மருந்து கழிக்கின்ற இக் கணிணி காலத்தில் மருந்து நீக்கி, பிணி நீக்கி, நல் உடல் மற்றும் உள நலத்துடன் வாழ வழி கூறும் ‘நன்னூல்’ “நமக்கு நாமே நலம் காண்போம்” என்ற இப் பொன்னூல் இஃது,

1. நடைமுறை ஓகம்
2. நமக்கு நாமே மருத்துவம்
3. மருந்தென வேண்டாவாம்

என்று மூன்று அங்கங்களாக பாங்குற பகுக்கப்பட்டு இன்புற்று வாழ வழி வகுக்கின்றது.

I. நடைமுறை ஓகம் (Yoga):

ஓகத்தில் கரை கண்டவரும் அல்லது நல்லாசிரியர் துணை கொண்டும்தான் ஓகம் பயிற்சி செய்ய வேண்டும் என்ற நிலைஇன்றி, எளியவரும், தமிழறிவு உடையவரும் தினமும் சிறிது நேரம் இன்னுடல் ஓம்புதல் வேண்டி எளிய முறையில் பயிற்சி செய்யும் வண்ணம் ஓக அடிப்படைகளும், மூச்சுப்பயிற்சியும், எளிய வகை நடைமுறையிலான ஒக உடல்பயிற்சிகளும் இனிதாக விளக்கப்பட்டுள்ளன. இஃது,

  • நடைமுறை ஓக முயற்சி
  • செய்ம்முறை விளக்கங்கள்
  • தமிழர் சொத்து

என்று மூன்றாய் விளக்குகின்றார்.

தமிழர் சொத்து என்ற பகுதியில் மூன்று அல்லது நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ‘ஓகநூல்’ எனும் மூலநூல் இருந்ததென்றும், கடல்கோள்களால் அழிந்து பட்டாலும் மக்களின் வழிவழித் தொடர்ச்சியான வாழ்வினால் ஓகமுறை பற்றிய நூல்கள் பின்னர் தோன்றியுள்ளன எனவும் இதைப் போல் தமிழருடைமையான பலவும திரிந்தும் சிதைந்தும், வழி மாறியும் போயின என்றும் இதனால் தமிழர் சொத்து, சொத்தையாய் போனது எனவும் விளக்கியுள்ளார்.

II. நமக்கு நாமே மருத்துவர்

இஃது ஓர் மெய்யியல் சார்ந்த பகுதி. நமது அறிவர் (சித்தர்) கூற்றான “உயிரார் அழிந்தால் உடம்பார் அழிவர், உடலார் அழிந்தால் உயிரார் அழிவர்” என்பதை தழுவி “நம்மை நாமே எங்ஙனம் நலமாய், உடலையும் மனத்தையும் நலமாய் பேணி வளர்ப்பது என மெய்யியலிலும், மருத்துவத்திலும் வளர்ந்து வெற்றிகண்ட மேதையான ‘எட்வர்டு பாச் (1886 – 1936) அவர்களின் வழியில் விளக்குகின்றார் ஆசிரியர். இதை ஆசிரியர் 82 வினா விடைகளாக எளியோர்க்கும் எளிதில் விளங்கும் வண்ணம் சிறுசிறு பகுதிகளாக பிரித்து விளக்கியுள்ளார்.

இங்கு ஒரு சிறிய பகுதியினை சுட்ட விரும்புகின்றேன். (வினா – 3) மூல நூலில் உன்னை நீயே குணப்படுத்துக (Heal Thyself) தலைப்பின்றி எட்டு பகுதிகளாக வற்புறுத்தி கூறப்பட்டுள்ளவை வருமாறு.

1. நோயும் மருத்துவமும்
2. ஐந்து அடிப்படை மெய்யியல் கூறுகள்
3. உண்மையான நோய்பற்றிய விளக்கம்
4. நோய்களை மருந்தன்றி போக்கும் வழிமுறைகள்
5. மாந்த உறவு நிலை பாதிப்புகள்
6. மருத்துவர் மருத்துவக் கலை பற்றிய கருத்துக்கள்
7. நடைமுறை கடைபிடிப்புக்கள்
8. நோய், துன்பம் ஆகிய இவற்றை வெற்றி காணும் வழிகள்
என்பவையாகும்.

மேலும் தொடக்கநிலை நோய்களாக பின்வரும் ஏழுவகை மனநிலைகளை குறிக்கின்றார் (வினா – 23)

1. செருக்கு
2. கொடுமை
3. வெறுப்பு
4. தன்விருப்பு

5. அறியாமை
6. நிலையின்மை
7. பேராசை

இவற்றுள் தன்விருப்பு (Self Love) நோய் மூலமாக குறிக்கப்பட்டு நடுநாயகமாய் வீற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

III. மருந்தென வேண்டாவாம்

இந்த பகுதியில் அனைத்து அறங்களையும் அறிவாகவும், செறிவாகவும், தௌ¤வாகவும், ‘அக்காலத்திற்கும், மிக மிக வளர்ந்ததாய் பறைசாற்றும் இக்காலத்திற்கும் மட்டும் இன்றி நாமறிய வருங்காலத்திற்கும் பொருந்தும் வகையில் 10 பாக்களாய் 133 அதிகாரங்களில் அறம், பொருள், இன்பம் என அனைத்தையும் ‘கடுகை துளைத்து ஏழ் கடலை புகுத்தி குறுகத் தணித்த குறள்’ என புகழப்பட்ட குறட்பாக்களை படைத்த திருவள்ளுவப் பெருந்தகையின் இரத்தினங்களில் இருந்து ஆசிரியர் தெரிந்து கண்ட மருத்துவ கொள்கைகளாய் பின்கண்டவற்றை வரிசைபடுத்தி அவற்றை விளக்குகின்றார்.

1. பொதுமக்கள் நலவாழ்வு (பொது சுகாதாரம் – Public Health)
2. முற்காப்பும் நோய்தடுப்பும் (Prophylactic and Prevention)
3. நோயை முளையிற் கிள்ளுதல்
4. நோய் முதல் நாடுதல்
5. மனச்செம்மை மருத்துவம்
6. உடல் இயக்கம்
7. மருத்துவ நெறிமுறைகள்
8. வாழ்நாள் நீட்டிப்பு
9. பொருந்தும் உணவு
10. உணவு மருத்துவம் அல்லது மருந்தில்லா மருத்துவம்

இவைகளிலும் இறுதியில் கூறப்பட்டுள்ள பொருந்தும் உணவும், மருந்தில்லா மருத்துவமும் தனி சிறப்பு வாய்ந்தவையாகும்.

இணைப்பாக கலைசொற்பட்டியலும், ஓக நிலைகளின் விளக்க புகைப்படங்களும் உள்ளமை சுடர்விளக்கின் தூண்டுகோல் போல் அமைந்துள்ளது.

பன்னிரு திரளை உப்பு மருந்துகள்

thiralai_book.PNG

பன்னிரு திரளை உப்பு மருந்துகள்

மரு.கு.பூங்காவனம்;
பக்கங்கள் : 112
விலை : உரு.70
தமிழ்மண் பதிப்பகம்,
சென்னை – 17

தினமணி நாளிதழில் வெளியான நூல் மதிப்பீடு கீழே காணவும்

நமது உடல் திசுக்களால் ஆனது. திசுக்கள் உருவாவதில் மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் புளோரைடு, கால்சியம், பாஸ்பரஸ், நேட்ரம் சல்பூரிகம் போன்ற பல்வேறு தாது உப்புப் பொருட்களுக்கு பங்குண்டு. மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாக இத் தாது உப்புகளைப் பயன்படுத்தும் புதிய மருந்து வழிமுறையே திரளை உப்பு மருந்துகள். ஓமியோபதி மருத்துவத்திலும் இந்த மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருத்துவத்தைப் பற்றி அறிமுகம் செய்யும் நூல். இந்த மருந்துகளைப் பற்றியும் இந்த மருந்துகளால் குணமாகும் நோய்களைப் பற்றியும் விரிவாகக் கூறும் நூல், பல்வேறு மருத்துவமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும் நூல்.

தினமணி – திங்கள்கிழமை, 24 மே, 2010

நூலின் சில பகுதிகள் தொகுத்தளித்தவர் : திருமதி. உமா அரிகரன்

பாவாணர் தம் கொள்கை வழி நின்று தமிழ் – தமிழர் காப்புக்கும், வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அரும்பாடுபட்டு வரும் தமிழ் அறிஞர் மரு.கு.பூங்காவனம் அவர்கள் எழுதிய நூல் “பன்னிரு திரளை உப்பு மருந்துகள்”.

இதனைப் படித்திட வாய்ப்புப் பெறும் நாம் – நாமும் பயன்பெற்று பிறரும் பயனடைய உதவுவதைச் சமுதாயக் கடமையாகக் கொள்வதே நோயற்ற சமுதாயத்திற்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு ஆகும்.

அந் நூலின் சில மணித்துளிகள்
முன்னுரை:

நோயின் சுவடு ஏதும் இல்லாமல் முற்றிலும் ஒழிக்கின்ற ஓமியோபதி மருத்துவ முறைக்கும், ஏனைய பிற மருத்துவ முறைகளுக்கும் இடைப்பட்டதாகவும் குறிக்கத்தக்க குறையேதும் இல்லாததாகவும் அமைந்திருப்பது திரளை உப்பு மருத்துவம் ஆகும்.
ஓமியோபதி மருத்துவர்களுக்குத் துணை மருத்துவமுறையாக உள்ள இம் மருத்துவம், அந் நிலையிலேயே நில்லாமல் வீட்டு மருத்துவ முறையாகவும் பயன்படுதல் வேண்டும்.

குறிப்புகள்:

மருத்துவ மேதை சுசுலர் – ஓமியோபதி மருத்துவ முறை கண்டுபிடிப்பாளர் மாமேதை சாமுவேல் ஆனிமான் தோன்றிய அதே செருமன் நாட்டில் ஒல்டன்பர்க்கு என்னுமிடத்தில் தோன்றியவர் மருத்துவர் மெட்.டபிள்யூ. எச்.சுசுலர் என்பவர் ஆவர்.
அவர் மரபுசார் மருத்துவ கல்விக்குப் பின்னர் ஓமியோபதி மருத்துவ முறைக்கு மாறியவர். இவரே பன்னிரு திரளை உப்பு மருத்துவ முறையை உருவாக்கித் தந்தவர். இதனை அவர் உயிர் வேதியியல் மருத்துவமுறை எனக் குறித்தார்.

உயிரணுக்களும் குருதியும்

நமது உடம்பில் உள்ள எல்லா உயிரணுக்களுக்கும் அவற்றிற்கேற்ற ஊட்டத்தை எடுத்துச் சென்று வழங்குவது குருதி.
குருதியை ஆராய்ந்து அதன் உள்ளடக்கப் பொருள்கள் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. குருதியில் உள்ளவை உறுப்புச் சார்பின் (Organic), உறுப்புச் சார்பற்றன (Inorganic) என இரண்டாகப் பகுக்கப் பெற்றன. அவை

உறுப்புச் சார்பானவை 
1. கொழுப்பு
2. சர்க்கரை
3. வெண்புரதம்

உறுப்புச் சார்பற்றவை
1. நீர்
2. சோடியம் குளோரைடு
3. கால்சியம் புளோரைடு
4. சிலிசிக் ஆசிடு
5. அயம்
6. கால்சியம்
7. மக்னீசியம்
8. சோடியம்
9. பொட்டாசியம

உறுப்புச் சார்பற்றவற்றுள் நீரைத் தவிர எஞ்சியவை அவற்றுள் கூட்டுப் பொருள்களுடன் பின் வருமாறு பன்னிரெண்டாக உள்ளன.

1. கல்காரியா ஃபுளோரிகம்
2. கல்காரியா பாசுபாரிகம்
3. கல்காரியா சல்பூரிகம்
4. பெரம் பாசுபாரிகம்
5. காலி மூரியாடிகம்
6. காலி பாசுபாரிகம்
7. காலி சல்பூரிகம்
8. மக்னீசியம் பாசுபாரிகம்
9. நேட்ரம் மூரியாடிகம்
10. நேட்ரம் பாசுபாரிகம்
11. நேட்ரம் சல்பூரிகம்
12. சைலீசியா

குருதிப் பொருள்களில் ஐந்து விழுக்காட்டளவில் உள்ள உறுப்புச் சார்பிலாப் பொருள்கள் இன்றேல் ஏனையவை இயக்கமற்ற தேக்கநிலையை அடைந்தும் கட்டுக் குலைந்தும் அழிந்துபடும். அவ்வாறு அவை கெடாமல் கட்டிக் காத்தும் அவற்றை இயக்கியும் காப்பவை ஐந்து விழுக்காடு உறுப்புச் சார்பிலாப் பொருள்களேயாதலால் அவற்றின் சீர்மையும் சமநிலையும் பாதிக்கப்படின் நோய்த் துன்பங்கள் உண்டாகும் என்பதும் வெளிப்படையாகிறது.

திரளை உப்பு மருந்துகள்

இப் பன்னிரெண்டு மருந்துகளும் திரளை உப்பு மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் ஆகிய இரண்டு முறைகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.

இத்திரளை உப்பு மருந்துகளைப் பயன்படுத்தியவர்கள் ஓமியோபதி மருத்துவர்களாகவும் இருந்தனர். அவர்கள் ஓமியோ, திரளை உப்பு மருந்துகளைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தினர்.

1. கல்காரியா ஃபுளோரிகம் – நெகிழ்வுத் திரளை அணுக்களுக்குரியது

2. கல்காரியா பாசுபாரிகம் – எலும்பு அணுக்களுக்கு உரியது

3. கல்காரியா சல்பூரிகம் – சீழ்கட்டும் நிலைகளுக்கு பயன்படுகிறது

4. பெரம் பாசுபாரிகம் – குருதி அணுக்கள், தசை அணுக்கள்
முதலானவற்றின் உட்பொருளாக காணப்படுகிறது

5. காலி மூரியாடிகம் – நரம்பு அணுக்களில் காணப்படும் உறுப்புச் சார்பிலாப் பொருள் ஆகிய மெக்னீசியம் பாசுபாரிகம், பொட்டாசியம் பாசுபாரிகம், கால்சிய்ம் என்னும் இவை பொட்டாசியம் குளோரைடு
என்பதோடு சேர்ந்து தசையணுக்களில் உள்ளன.

6. காலி பாசுபாரிகம் – மூளை, நரம்புகள், தசைகள், குருதி அணுக்கள், ஆகியவற்றில் உள்ளது. மூளை அசதி, மூளையில் அடிபடுவதால் உண்டாகும் பாதிப்புக்கு இது மருந்தாகக் கூடும்.

7. காலி சல்ஃபூரிகம் – மேற் புறத் தோல், தோலின் அடுக்கு ஆகியவற்றின் செயல்பாடுகளுக்குச் காலி சல்ஃபூரிகம் உரியதாகும்.

8. மெக்னீசியம் பாசுபாரிகம் – இது தசை நரம்பு திரளைகளில் உள்ள கனிமப் பொருளாகும். இஃது எலும்புகளில் உள்ளது.

9. நேட்ரம் மூரியாடிகம் – உணவு உப்பு உடம்பின் நீரியல் பகுதி, திண்மைப் பகுதி ஆகிய எல்லாவற்றிலும் உள்ளது.

10. நேட்ரம் பாசுபாரிகம் – மிகையான பால் அமிலத்தால் உண்டாகும் நோய்களுக்கு இவை தேவைப்படுகின்றன.

11. நேட்ரம் சல்பூரிகம் –  கிளாபர் உப்பு என்னும் சோடியம் சல்ஃபேட்டும், உணவு உப்பு ஆகிய சோடியம் குளோரைடும் எதிர் நிலையில்  செயலாற்றுகின்றன. உயிர் அணுக்களில் சேர்ந்த நீரைச் சோடியம் சல்ஃபேடு வெளியேற்றுகின்றது.

12. சைலீசியா – இணைப்புத் திரளைகளிலும், தோலிலும்,
முடியிலும் நகங்களிலும் சிலிகா அமைந்துள்ளது

நோய் அறிகுறிகளை நன்கு அறிந்த பின்னும் அத்தகைய அறிகுறிகளைக் கொண்ட பல மருந்துகளுள்ளும் உரிய ஒரு மருந்தை வேறுபடுத்தித் தேர்ந்து கொள்வதாலேயே அந் நோயை மிக விரைந்து போக்க முடிகிறது.

பிறந்த நாள், திருமணம் மற்றும் விழாக்காலங்களில் உறவினர் நண்பர்களுக்கு பரிசுப் பொருளாகக் கொடுக்கத்தக்க வண்ணத்தில் இந்த பதிப்பு வெளி வந்துள்ளது.

ஓமியோபதி அறிமுகக் கட்டுரைகள்

omiyoarimu_book.PNG

ஓமியோபதி அறிமுகக் கட்டுரைகள்

மரு.கு.பூங்காவனம்
பக்.168
ரூ.105
தமிழ்மண் பதிப்பகம்
சென்னை – 17
044-24339030

தினமணி நாளிதழில் வெளியான நூல் மதிப்பீடு கீழே காணவும்

ஓமியோபதி மருத்துவத்தைப் பற்றி அதன் அடிப்படையில் இருந்து தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும் நூல். ஓமியோபதி மருத்துவத்தின் சிறப்பியல்புகளைப் பற்றி நூல் முழுக்கக் கூறப்பட்டுள்ளது. மனநலம் காப்பதற்கு உள்ள ஓமியோபதி மருத்துவம், விளையாட்டு வீரர்களுக்கான ஓமியோபதி மருத்துவம் அடிபட்ட காயங்கள், தீப் புண்கள், எலும்புகளில் ஏற்படும் சிதைவுகள், பூச்சி, பாம்புக்கடி, நாய்க்கடி போன்றவற்றிற்கான ஓமியோபதி மருத்துவம் பற்றிய செய்திகள் அடங்கியுள்ள நூல். நூலாசிரியர் ஓமியோபதி மருத்துவராகையால அவர் தனது சொந்த அனுபவங்க¬ளின் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி – திங்கள்கிழமை, 17 மே, 2010

 

ஓமியோ முரசு இதழில் வெளிவந்த நூல் மதிப்புரை

உலகப் பொதுமறை திருக்குறள் என்று சொல்வது போல ஓமியோபதி ஒரு உலகப் பொதுச்சொத்து என அறிமுக உரையிலேயே உணர்த்தியுள்ளார் ஆசிரியர். முன்னுரையில் சீழும் சொரியும் களிம்புகளாலும் ஊசியாலும் அமுக்கப்பட்டதால், டான்சிலும், குடல்வால் அழற்சியுமாக மாறிவிட்டதுடன் எப்படி அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது என உதாரணங்களுடன் கூறி ஓமியோபதியில் நலமானதையும் விளக்கியுள்ளது பாராட்டத்தக்கது. ஓமியோபதியின் உயிராற்றல், ஒப்புமைக்கொள்கை, வீறியம் மருந்தாற்றல் அடங்கல் (ரெப்பர்டரி) என தத்துவங்களை, படிப்படியாக அழகு தமிழில் விளங்கும்படி எடுத்துரைத்துள்ளார்.
“மாபெரும் நன்னீர் உள்ளது அதுவே ஓமியோபதிச்சுனை” என்று முத்தான வார்த்தைகளில் பொதுமக்களும் ஓமியோபதியை ஆழமாக உணர்ந்து, புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட நன்னூல் ஆகும். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

ஹோமியோ முரசு – பிப்ரவரி – 2013

மகிழ்ச்சி தரும் மலர் மருத்துவம்

malar_book.PNG

மகிழ்ச்சி தரும் மலர் மருத்துவம் – மரு.கு.பூங்காவனம்
பக்.248
ரூ.155;
தமிழ்மண் பதிப்பகம்
சென்னை – 17
044-24339030

தினமணி நாளிதழில் வெளியான நூல் மதிப்பீடு கீழே காணவும்

இங்கிலாந்தின் மலர் மருந்துகளைப் பற்றிய அறிமுகமாக மலர்ந்துள்ள நூல், மனித மனத்தின் பல்வேறு நிலைகளுக்கேற்ப அளிக்கப்படும் மலர் மருந்துகளைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இனம்புரியாத அச்சம், பிறரை அடக்கியாள நினைக்கும் மனப்பான்மை, ஊசலாடும் குணம், எதிலும் நாட்டமில்லாத மனம், எப்போதும் பேசிக் கொண்டு இருக்கும் பழக்கம. எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் போக்கு, பிடிவாதம் போன்ற பல மனநிலைகளுக்குரிய மலர் மருந்துகளைப் பற்றி மிக விளக்கமாகவும் தௌ¤வாகவும் கூறியுள்ள நூல்.

தினமணி – திங்கள்கிழமை, 3 மே, 2010

 

ஓமியோபதியின் நெடுநோய்க் கோட்பாடு

omiyo_book3.PNG
(Chronic Diseases – Theoretical Part)
சாமுவேல் ஆனிமான்
தமிழாக்கம் : மரு. கு. பூங்காவனம்
வெளியீடு : வேங்கை பதிப்பகம்,
80 ஏ, மேலமாசிவீதி, மதுரை – 1
94439 62521

ஓமியோ முரசு இதழில் வெளிவந்த நூல் மதிப்பீடு

மாமேதை ஹானெமனின் Chronic Diseases & Theoretical Part, 1828ல் வெளிவந்தது. இதன் தமிழாக்கத்தை ஆசிரியர் மரு.கு.பூங்காவனம் அவர்கள் நமக்களித்திருக்கிறார்கள்.
இந்நூலாசிரியர் இதற்கும் முன்னதாக ஏழு மருத்துவ நூல்களை வெளியிட்டிருப்பதுடன், இன்னும் மூன்று மருத்துவ நூல்களை வெளியிட அச்சில் இருப்பது அறிந்து பெருமைபடுகிறோம். இதிலிருந்து ஹோமியோபதிக்கான ஆசிரியரின் கடின உழைப்பு பாராட்டத்தக்கதாக இருக்கிறது.
ஆங்கில மொழி கடுநடையிலிருந்து, இலகுவாகப் புரிந்து கொள்வதற்காக, சொற்களில் சிக்கிக் கொள்ளாமல், மூலக்கருத்திலிருந்து விலகிப் போகாமல், மையப் புள்ளியை தெளிவாக விவரித்திருக்கிறார்.
ஹோமியோபதியின் நெடுநோய்க் கோட்பாடு என்ற இந்நூலின் உதவியைக் கொண்டு மாமேதை ஹானெமனின் Chronic Diseases புத்தகத்தின் உட்கருத்தை, தமிழில் தெளிவாகத் தெரிந்து, புரிந்து, அல்லல்படும் மக்களின் நெடுநோய்களை நீக்கும் ஆற்றலை ஹோமியோபதி மருத்துவர்கள் அதிகரித்துக் கொள்ள இந்நூல் உதவுமென்று நம்புகிறோம்.

அ.அப்துல் அஜிஸ்
ஹோமியோ முரசு – நவம்பர் – 2012

 

நூலின் சில பகுதிகள் தொகுத்தளித்தவர் : பொறிஞர் பா. திருநாவுக்கரசு

மருத்துவ மாமேதை சாமுவேல் ஆனிமான் வழங்கிய மாபெரும் கொடைகளாக உள்ளவை மருந்தியல் நெறிமுறை (Organon)யும், நெடுநோய்க் கோட்பாடும் (Chronic Diseases) ஆகும். இவற்றில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றால் அன்றி ஓமியோபதி மருத்துவப் பயிற்சியில் வெற்றிபெற முடியாது. அந்நூல்களில் தேர்ச்சி பெற்றவர்களும் அந் நூற் செய்திகளை அப்படியே பின்பற்றுபவர்களும் ஆற்றுகின்ற மருத்துவ அருஞ்செயல்கள் வியப்பு ஊட்டுபவையாய் உள்ளன.
மரு. கு. பூங்காவனம்

என்னை நானே இயன்றவரை மேம்படுத்திக் கொள்வதும், என்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் இன்னும் நன்றாக ஆக்கிக் கொள்வதும் ஆகிய நோக்கத்துடன் நாம் இம் மண்ணுலகில் தோன்றியுள்ளேன் என்பதை அறியவில்லை என்றால் :-

  • எனக்கு மட்டுமே உடைமையாக உள்ளதும்;
  • அதையும் எனக்கு மட்டுமே உரிய கமுக்கமானதாக (secret) வைத்துக் கொண்டு அதனால் நான் பெரும்பயன் அடைவதற்கு வழிவகுப்பதாக உள்ளதும்;

ஆகிய ஒரு கலையை – நான் இறந்து போவதற்கு முன் இவ் உலக மக்களின் பொதுநன்மை கருதி – அக்கலையை வெளிப்படுத்தாமல் வைத்துக் கொள்வேன் ஆயின், இவ் உலகத்தைச் செம்மைப் படுத்துவதற்குச் சிறிதும் தெரியாதவனாகவே உள்ளேன் என்று என்னை நான் கருதிக் கொள்ள வேண்டியதாகும்.
– சாமுவேல் ஆனிமான் (1828)

புறத்தோலில் எழும்பித் தோன்றிய சொறியைத் தவறான மருத்துவத்தால் அடக்கியதாலும், அல்லது வேறு முறைகளால் அது தோலில் இருந்து மறைந்து விடுமாறு செய்வதாலும் – (அதைத்தவிர) பிறவகையில் நல்ல உடல்நலம் வாய்க்கப் பெற்ற அத்தகையவர்களிடம் அதே வகையான (தோல் எழும்புதல்) அல்லது அதற்கு ஒத்த அறிகுறிகளுடன் அது மீண்டும் தோன்றுவது உறுதிப்பட்டுள்ளது.
– மாமேதை ஆனிமான் (பக்கம் 26)

மிகப்பல நெடுநோய்களுக்கும் – மிகப் பேரளவான நிலையில், அடிப்படையாய் விளங்குவது இச் சொறி நோயே ஆகும். அந் நெடுநோய்களுள் ஒவ்வொன்றும் பிறவற்றுடன் தலையாய முறையில் வேறுபட்டுள்ளவை போல் காணப்பட்ட போதிலும், உண்மையில் அவை எப்படி வேறுபட்டவை அல்ல.
மாமேதை ஆனிமான் (பக்கம் 32)

நமக்குத் தெரிந்தவரை, சொறியனே மிகப்பழமை வாய்ந்த நோய்மூலச் சார்பு நெடுநோய் ஆகும். அது பறங்கிப்புண் நோயையும், வெட்டை மருநோயையும் போலவே மிக்க சலிப்பை உண்டாக்குவது; ஆகவே அதை முழுமையாய்க் குணப்படுத்தினாலன்றி, மிக நீண்ட வாழ்நாளைக் கொண்ட மாந்தர் தம் கடைசி மூச்சு வரை அதை அழிக்க முடியாது. கட்டுடல் வாய்ந்த உடல்வாகுவின் முழுமையான வலிமையினாலும் அச் சொறியனை அழித்துப் போக்கமுடியாது.
– மாமேதை ஆனிமான் (பக்கம் 34)

ஓமியோபதி – கொள்கை விளக்கக் கட்டுரைகள்

omiyo_book.PNG

ஓமியோபதி – கொள்கை விளக்கக் கட்டுரைகள்
ஆசிரியர்  : மரு. கு. பூங்காவனம்

பக்கங்கள் : 94
விலை : உரு.60
வெளியீடு : தாமரை பதிப்பகம், சென்னை. தொலைபேசி : 044-26258410

ஓமியோ முரசு இதழில் வெளி வந்த நூல் மதிப்புரை

ஓமியோபதி மருத்துவம் எவ்வளவு எளிமையானதோ, அந்த அளவிற்கு கடுமையானதும் ஆகும். அதாவது, இம்மருத்துவத்தின் தத்துவங்களை சரியாகப் புரிந்து கொண்டால் மிக எளிமையாகவே இருக்கும். இந்த தத்துவங்களை ஆங்கிலத்தில் படிக்கும் போது, அம்மொழியை நன்கு தெரிந்தவர்களே தடுமாறித்தான் போகிறார்கள்.
இதை நிவர்த்தி செய்யும் வகையில், ஓமியோபதி கொள்கை விளக்கக் கட்டுரைகள் நூலை எழுதியிருக்கிறார் மரு.கு. பூங்காவனம். இவர் சிறந்த தமிழ்ப் பற்றாளர் என்கிற வகையில், ஆர்கனானில் கூறப்பட்டிருக்கும் தத்தவங்களை, மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், அழகான தமிழ் நடையில் இந்நூலை எழுதியிருக்கிறார்.
குறிப்பாக, பிற மொழி – ஆங்கில – கலப்பில்லாமல் இந்நூல் எழுதப் பட்டிருப்பது தனிச்சிறப்பாகும். அனைவரும் படிக்க வேண்டிய அவசியமான நூல்.
ஆசிரியரின் வார்த்தைகளில் :
ஓமியோபதியர் ஒவ்வொருவரும் ஓமியோபதி மருந்தியல் நெறிமுறை என்னும் மாபெரும் கலைக்கூடத்திற்குள் சென்றும், ஆங்குள்ள அரும் பொருள்களைக் கண்டறிந்து வியந்தும் மகிழ்ந்தும் இன்புறுதல் வேண்டும். அதற்கான படிக்கட்டுகளாக அமைந்தவையே இதிற் காணப்படும் இருபத்து மூன்று குறுங்கட்டுரைகள்.

ஹோமியோ முரசு – ஜுலை – 2013

 

நூலின் சில பகுதிகள் தொகுத்தளித்தவர் : திருமதி. விசயா கோவர்த்தனன்

எது இயற்கை மருத்துவம் ?
(Natural Laws and Homeopathy)

இயற்கை விதிகள் மாறாதவை, செயற்கை விதிகள் இடத்துக்கு இடம், காலத்துக்கு காலம் தேவைக்கேற்ப என மாற்றம்பெறுபவை. இக் கோட்பாட்டை  ஆராயும் போது உலகில் உள்ள மருத்துவ முறைகளில் ஒன்று மட்டுமே இயற்கை மருத்துவம் என்று குறிக்கத்தக்கதாக உள்ளது. அது, ஓமியோபதி மருத்துவம் மட்டுமே யாகும்.

இயற்கை கற்பிக்கும் பாடம் :-

ஏற்கனவே உள்ள ஒரு நோயும், அதற்கு ஒத்ததாகவும் அதைவிட வலிமையானதாகவும் உள்ள ஒரு நோயும் ஆகிய ஒத்த நோய்கள் இரண்டும் ஒரே நேரத்தில் உடம்பியக்கத்தில் இணையும் போது அதன் விளைவு முற்றிலும் வேறாகக் காணப்படுகின்றது. அத்தகைய நிலையில் இயற்கையின் செயல் முறைகளால் நோய் குணமாக்கப்படும் நிலையை நாம் காண்கின்றோம். ஆதலால் மாந்தராகிய நாமும் (அவ் இயற்கை முறையைப் பின்பற்றி) எவ்வாறு குணப்படுத்த முனைதல் வேண்டும் என்றும் பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம். (நெறி – 43)

நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வருவேன்
(Cause and Effect)

“சிங்கோனா” மருந்து கசப்புச் சுவையுடையதாய் இருப்பதால் அது மலை(மலேரியா)க் காய்ச்சலைப் போக்குகிறது என்று காரணம் ஆகாத ஒன்றை காரணமாகக் கூறியதை திருத்த முற்பட்டதன் விளைவே ஓமியோபதி தோற்றத்திற்கு மூலமாக அமைந்தது. எனவே, காரண காரியப் பெற்றோர்க்கு பிறந்த குழந்தையே ஓமியோபதி! அதன் ஒவ்வொரு உட்கூறும் காரண காரிய தொடர்புடையது. சான்றாக சில;

1. ஆவி வடிவு போன்ற (Spirit like) ஆற்றலைக் கொண்டது நோய்
– இது காரணம்
எனவே, ஆவி வடிவு போன்ற நிலையில உள்ள உயிராற்றலை அது
பற்றிப் பாதிக்கிறது – இது காரியம்

2. ஆவி வடிவுபோன்ற ஆற்றலைக் கொண்டது நோய் – மீண்டும் இது காரணம்
எனவே, அதற்கு ஒத்ததும், அதனினும் வலிமையானதும், ஆவி வடிவானதும் ஆகிய மருந்தே அந்நோயை முற்றாக அழித்து ஒழிக்கிறது – இது காரியம்

3. மருந்துப் பொருளில் நோயை உண்டாக்கும் ஆற்றல் உள்ளார்ந்து
கிடக்கிறது – இது காரணம்.
அதனால் அது, அதற்கு ஒத்துள்ள நோயைப் போக்குகிறது – இது
காரியம்

இவை தொடர்பான நெறிமுறைகள் – 9, 11, 16, 21, 22 ஆகியவை.

உயிராற்றல் பற்றிய உண்மை விளக்கம்
(The Vital Force)

ஓமியோபதியின் அடிப்படைக் கருத்துகளில் ஒன்றாகிய உயிராற்றல் பற்றி உண்மையானதும் அறிவுக்குப் பொருந்துவதும் ஆகிய விளக்கம் வேண்டப்படுகின்றது. இவ் விளக்கத்தை பின்கண்டவாறு நான்கு நிலைகளில் காணலாம். அவை:

முதல்நிலை விளக்கம் – உடம்பை இயக்கும் உயிராற்றல்

இரண்டாம் நிலை விளக்கம் – உயிராற்றலும் அண்டப் பேராற்றலும்

மூன்றாம் நிலை விளக்கம் – உயிராற்றலும் மன ஆற்றலும்

நான்காம் நிலை விளக்கம் – உயிராற்றலால் நோயைக் குணப்படுத்துதல்

இந்நூலில் பக்கம் 9, 10, 11, 12களில் விளக்கமளித்துள்ளார்.

அதோடு –

  • உயிராற்றலின் பாதிப்பே நோய் (நெறி : 11) என்றும்
  •  உயிராற்றலின் மீட்சியே நலம் (நெறி : 12) என்றும்
  •  உயிராற்றலும் உடலும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத தொடர்புடையவை (நெறி : 15) என்றும்
  • உயிராற்றலின் எதிர்வினைச் செயலால் நோய் குணமாகிறது  (நெறி : 62-67) என்றும்;

கூறியதோடு, உயிராற்றலின் பிற செயல்பாடுகளையும் மாமேதை ஆனிமான் ஆங்காங்கே சுட்டிக் காட்டியுள்ளார்.

வாய்ப்பேச்சை அறிவது போலவே நோய்ப் பேச்சையும் அறிய வேண்டும்
(Knowing the Symptoms)

வாயுள்ளவன் பேசக்கடவன் – என்பது அறியப்பட்டதே ஆயின், நோய்களும் பேசுகின்றன! என்கிறார் மருத்துவ மாமேதை சாமுவேல் ஆனிமான். அந்நோய்ப் பேச்சு மொழியைக் குறி என்றும் அறிகுறி என்றும் அவர் கூறினார். பக்கம் 17, 18, 19, 20 இந்நூலில் விளக்கம் உள்ளது.

ஒரு கணினிப் பொறியாளர் கற்றுக் கொள்ளும் கணினி மொழிகளின் (Computer Language) அறிவுத்திறம் அவரை நன்னிலைக்கு உயர்த்துகிறது.

ஓமியோபதியர்கள் தங்களுடைய குணமாக்கற் கலை(Healing Art)யில் வல்லவர்களாய் விளங்குவதற்கு நோய்களின் மொழிகளை குறிகள், அறிகுறிகள் ஆகிய இவற்றின் இயல்புகளை நன்றாகப் புரிந்து கொள்ளும் வல்லமையுடையவர்களாய்த் திகழ வேண்டுமென்றோ?

ஒதுக்குப்புறம் (இடப்பாதிப்பு நோய்)
(Local disease)

நிறைய மச்சங்கள் இருப்பதால் நலமும் மிகுகின்றது, முதுமையடைவதும் தள்ளி போகின்றது என்னும் செய்தியாக ஓர் ஆங்கில நாளிதழில் வெளியானது. (“More moles means better health, delayed ageing” – The Times of India – dated : 24.11.2010)

ஓமியோபதி மருந்தியல் நெறிமுறை (Organon)யில் (நெறி 201) விளக்கம் கொடுத்துள்ளார்.

நீர் ஒட்டம் தடைப்படக் கூடாது என்பதற்காக, அங்கு அடித்து வரப்பட்ட மரக்கிளைகள் ஒதுக்கப்படுகின்றன – இயற்கையான செயல்பாடு.

அகப்பாதிப்பு நோய் துன்பம் பெருகாமல் இருக்குமாறும் இன்றியமையாத உடற்பகுதிகளுக்குக் காப்பு அளிக்குமாறும் அந்நோயின் ஒரு பகுதி புறப் பாதிப்பாக ஒதுக்கப் படுகிறது. இது உடலியக்கச் செயல்பாடு.

மச்சங்களாகி பெருகிய மடை மாற்றத்தால் நோய் பாதிப்பும் குறைகிறது. வாழ்நாளும் நீள்கிறது. – இது இலண்டன் மாநகர் அரசர் கல்லூரி ஆய்வுக் குழுவினரின் முடிவு, இவை அனைத்துக்கும் விளக்கமாய் அமைந்ததே இவ் ஓமியோபதி நெறிமொழி (Organon)

இத்தனை சிறிய உருண்டை போதுமா?
(Minimum Dose)

பொருத்தமான ஓமியோபதி மருந்துகள் குணமாக்கும் செயலை எவ்வாறு தூண்டுகின்றன என்பது புரிந்தவுடன் அத்தகைய ஐயம் தோன்றாது.

ஏனைய மருத்துவமுறை மருந்துகள் எல்லாம் உணவைப் போல உட் கொள்ளப்பட்டு செரிமானமாகும் நிலையில் தான் அவை செயல்படுகின்றன. ஆனால் ஓமியோபதி மருந்தோ, உணர்ச்சி நரம்பைத் தொட்டவுடனயே அதன் தூண்டுணர்வு தொடங்கி விடுகிறது என விளக்குகின்றார் மாமேதை ஆனிமான் என்று அதன் நெறிமுறைகளை 272, 284, 285, இந்நூலில் மருத்துவர் பூங்காவனம் ஐயா அவர்கள் எழுதியுள்ளார்.

பேச தெரிந்தால் போதாது, படிக்கத் தெரிந்தால் போதாது எழுதிக் காப்பதே இன்றியமையாதது.
(Case Record)

ஓமியோபதியில் நோய்க்குறிப்புகளை நுணுக்கமாகவும் விரிவாகவும் சரிநுட்ப (Accurate)மாகவும் எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தும் சில நெறிமொழிகள் கூறப்பட்டுள்ளன. செயற்கை நோய்க் குறிப்பையும், இயற்கை நோய்க்குறிப்பை எழுதும் முறையும் நெறி எண்களை அனைத்தும் கொடுத்து விளக்கியதோடு நோய்க்குறிப்பில், மிக இன்றியமையாத ஒரு சிறு அறிகுறி விடுபட்டாலும் அங்கே நோய் குணமாவது தள்ளியும் தப்பியும் போய்விடும் என்பதால், அவ் அவலத்தைத் தவிர்பபதற்காகவே நோய்க் குறிப்பை எழுத வேண்டும். அதையும் மிகச் சரியாக எழுத வேண்டும் என்பதும் அவ்வாறு எழுதிக் கொள்வதால் உண்டாகும் அளவில்லாத நன்மைகளை வலியுறுத்துவதற்காகவும் இதுபற்றிய விரிவான நெறிமுறைகளை மாமேதை ஆனிமான் எடுத்துரைத்துள்ளார் என்றும் இக் கட்டுரையை பேராசிரியர் மற்றும் மருத்துவர் பூங்காவனம் ஐயா அவர்கள், ஒரு நல்ல மருத்துவம் தமிழ் மக்களுக்கு போய் சேர வேண்டும், பயன் அடைய வேண்டுமென்றும் எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாமல் அயராத உழைப்பும் பெரு முயற்சிக் கொண்டு பல நூல்களை எழுதியுள்ளார் அனைவரும் படித்து பயன்பெற்று நல் உள்ளம் கொண்ட மாமனிதரை வாழ்த்தி போற்றிடுவோமாக.