Category Archives: Homoeopathy

ஓமியோபதியில் குடற்பூஞ்சை மருந்துகள்

நூல் : ஓமியோபதியில் குடற்பூஞ்சை மருந்துகள்
ஆசிரியர் : மரு. கு. பூங்காவனம்

ஆண்டு : 2015
பக்கங்கள் : 155
விலை : உரூ. 120/-
வெளியீடு : எழுத்தாணி, சென்னை

இந்நூல் முழுவதையும் இங்கே படிக்கலாம்

நூலை பதிவிறக்கம் செய்ய  இங்கே சொடுக்கவும்

 

 

ஓமியோபதி கொள்கை விளக்கக் கட்டுரைகள் -இரண்டாம் பாகம் (2016)

 

 

 

 

 

 

நூல் : ஓமியோபதி கொள்கை விளக்கக் கட்டுரைகள் -இரண்டாம் பாகம்
ஆசிரியர் : மரு. கு. பூங்காவனம்

ஆண்டு : 2018
பக்கங்கள் : 90
விலை : உரூ. 75/-
வெளியீடு : வேங்கை பதிப்பகம், மதுரை.  தொலைபேசி : +91 94439 62521

இந்நூல் முழுவதையும் இங்கே படிக்கலாம்

நூலை பதிவிறக்கம் செய்ய  இங்கே சொடுக்கவும்

 

ஓமியோபதி ‍- முதல் உதவி மருத்துவம்

இது ஓமியோபதி முதல் உதவி பற்றிய சிறு நூல்.  இதை இங்கேயே படிக்கலாம்; பதிவிறக்கம் செய்யலாம்; இலவயமாக அச்சிட்டும் வழங்கலாம்.

This is a small booklet on First aid with Homoeopathy. Please feel free to download, print and distribute it free of cost.

You can read it here

You can download the pdf file from here
பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

பண்பலை நிகழ்ச்சி – AIR FM Rainbow Program (2013)

முழு நிகழ்ச்சியும் இங்கே ஐந்து பாகங்களாக பிரிக்கப் பட்டு பதிவேற்றப் பட்டுள்ளது.

The full talk has been uploaded to Youtube in five parts.

ஒலிப்பதிவின் பாகம் 1 – This is the first of the five parts

ஒலிப்பதிவின் பாகம் 2 -This is the second one.

ஒலிப்பதிவின் பாகம் 3 -This is the third.

ஒலிப்பதிவின் பாகம் 4 -This is the fourth one.

ஒலிப்பதிவின் பாகம் 5  -The final one.

ஓமியோபதி மருத்துவ நெறிமுறை -The Organon of Medicine

organon_book.PNG

நூல் : ஓமியோபதி மருத்துவ நெறிமுறை
மொழி பெயர்ப்பு : மரு. கு. பூங்காவனம்

ஆண்டு : 2013
விலை : உரு. 300/-
வெளியீடு : வேங்கை பதிப்பகம், மதுரை.  தொலைபேசி : +91 94439 62521

இந்நூல் முழுவதையும் இங்கே படிக்கலாம்

ஓமியோபதி அறிமுகக் கட்டுரைகள்

omiyoarimu_book.PNG

ஓமியோபதி அறிமுகக் கட்டுரைகள்

மரு.கு.பூங்காவனம்
பக்.168
ரூ.105
தமிழ்மண் பதிப்பகம்
சென்னை – 17
044-24339030

தினமணி நாளிதழில் வெளியான நூல் மதிப்பீடு கீழே காணவும்

ஓமியோபதி மருத்துவத்தைப் பற்றி அதன் அடிப்படையில் இருந்து தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும் நூல். ஓமியோபதி மருத்துவத்தின் சிறப்பியல்புகளைப் பற்றி நூல் முழுக்கக் கூறப்பட்டுள்ளது. மனநலம் காப்பதற்கு உள்ள ஓமியோபதி மருத்துவம், விளையாட்டு வீரர்களுக்கான ஓமியோபதி மருத்துவம் அடிபட்ட காயங்கள், தீப் புண்கள், எலும்புகளில் ஏற்படும் சிதைவுகள், பூச்சி, பாம்புக்கடி, நாய்க்கடி போன்றவற்றிற்கான ஓமியோபதி மருத்துவம் பற்றிய செய்திகள் அடங்கியுள்ள நூல். நூலாசிரியர் ஓமியோபதி மருத்துவராகையால அவர் தனது சொந்த அனுபவங்க¬ளின் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி – திங்கள்கிழமை, 17 மே, 2010

 

ஓமியோ முரசு இதழில் வெளிவந்த நூல் மதிப்புரை

உலகப் பொதுமறை திருக்குறள் என்று சொல்வது போல ஓமியோபதி ஒரு உலகப் பொதுச்சொத்து என அறிமுக உரையிலேயே உணர்த்தியுள்ளார் ஆசிரியர். முன்னுரையில் சீழும் சொரியும் களிம்புகளாலும் ஊசியாலும் அமுக்கப்பட்டதால், டான்சிலும், குடல்வால் அழற்சியுமாக மாறிவிட்டதுடன் எப்படி அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது என உதாரணங்களுடன் கூறி ஓமியோபதியில் நலமானதையும் விளக்கியுள்ளது பாராட்டத்தக்கது. ஓமியோபதியின் உயிராற்றல், ஒப்புமைக்கொள்கை, வீறியம் மருந்தாற்றல் அடங்கல் (ரெப்பர்டரி) என தத்துவங்களை, படிப்படியாக அழகு தமிழில் விளங்கும்படி எடுத்துரைத்துள்ளார்.
“மாபெரும் நன்னீர் உள்ளது அதுவே ஓமியோபதிச்சுனை” என்று முத்தான வார்த்தைகளில் பொதுமக்களும் ஓமியோபதியை ஆழமாக உணர்ந்து, புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட நன்னூல் ஆகும். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

ஹோமியோ முரசு – பிப்ரவரி – 2013

ஓமியோபதியின் நெடுநோய்க் கோட்பாடு

omiyo_book3.PNG
(Chronic Diseases – Theoretical Part)
சாமுவேல் ஆனிமான்
தமிழாக்கம் : மரு. கு. பூங்காவனம்
வெளியீடு : வேங்கை பதிப்பகம்,
80 ஏ, மேலமாசிவீதி, மதுரை – 1
94439 62521

ஓமியோ முரசு இதழில் வெளிவந்த நூல் மதிப்பீடு

மாமேதை ஹானெமனின் Chronic Diseases & Theoretical Part, 1828ல் வெளிவந்தது. இதன் தமிழாக்கத்தை ஆசிரியர் மரு.கு.பூங்காவனம் அவர்கள் நமக்களித்திருக்கிறார்கள்.
இந்நூலாசிரியர் இதற்கும் முன்னதாக ஏழு மருத்துவ நூல்களை வெளியிட்டிருப்பதுடன், இன்னும் மூன்று மருத்துவ நூல்களை வெளியிட அச்சில் இருப்பது அறிந்து பெருமைபடுகிறோம். இதிலிருந்து ஹோமியோபதிக்கான ஆசிரியரின் கடின உழைப்பு பாராட்டத்தக்கதாக இருக்கிறது.
ஆங்கில மொழி கடுநடையிலிருந்து, இலகுவாகப் புரிந்து கொள்வதற்காக, சொற்களில் சிக்கிக் கொள்ளாமல், மூலக்கருத்திலிருந்து விலகிப் போகாமல், மையப் புள்ளியை தெளிவாக விவரித்திருக்கிறார்.
ஹோமியோபதியின் நெடுநோய்க் கோட்பாடு என்ற இந்நூலின் உதவியைக் கொண்டு மாமேதை ஹானெமனின் Chronic Diseases புத்தகத்தின் உட்கருத்தை, தமிழில் தெளிவாகத் தெரிந்து, புரிந்து, அல்லல்படும் மக்களின் நெடுநோய்களை நீக்கும் ஆற்றலை ஹோமியோபதி மருத்துவர்கள் அதிகரித்துக் கொள்ள இந்நூல் உதவுமென்று நம்புகிறோம்.

அ.அப்துல் அஜிஸ்
ஹோமியோ முரசு – நவம்பர் – 2012

 

நூலின் சில பகுதிகள் தொகுத்தளித்தவர் : பொறிஞர் பா. திருநாவுக்கரசு

மருத்துவ மாமேதை சாமுவேல் ஆனிமான் வழங்கிய மாபெரும் கொடைகளாக உள்ளவை மருந்தியல் நெறிமுறை (Organon)யும், நெடுநோய்க் கோட்பாடும் (Chronic Diseases) ஆகும். இவற்றில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றால் அன்றி ஓமியோபதி மருத்துவப் பயிற்சியில் வெற்றிபெற முடியாது. அந்நூல்களில் தேர்ச்சி பெற்றவர்களும் அந் நூற் செய்திகளை அப்படியே பின்பற்றுபவர்களும் ஆற்றுகின்ற மருத்துவ அருஞ்செயல்கள் வியப்பு ஊட்டுபவையாய் உள்ளன.
மரு. கு. பூங்காவனம்

என்னை நானே இயன்றவரை மேம்படுத்திக் கொள்வதும், என்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் இன்னும் நன்றாக ஆக்கிக் கொள்வதும் ஆகிய நோக்கத்துடன் நாம் இம் மண்ணுலகில் தோன்றியுள்ளேன் என்பதை அறியவில்லை என்றால் :-

  • எனக்கு மட்டுமே உடைமையாக உள்ளதும்;
  • அதையும் எனக்கு மட்டுமே உரிய கமுக்கமானதாக (secret) வைத்துக் கொண்டு அதனால் நான் பெரும்பயன் அடைவதற்கு வழிவகுப்பதாக உள்ளதும்;

ஆகிய ஒரு கலையை – நான் இறந்து போவதற்கு முன் இவ் உலக மக்களின் பொதுநன்மை கருதி – அக்கலையை வெளிப்படுத்தாமல் வைத்துக் கொள்வேன் ஆயின், இவ் உலகத்தைச் செம்மைப் படுத்துவதற்குச் சிறிதும் தெரியாதவனாகவே உள்ளேன் என்று என்னை நான் கருதிக் கொள்ள வேண்டியதாகும்.
– சாமுவேல் ஆனிமான் (1828)

புறத்தோலில் எழும்பித் தோன்றிய சொறியைத் தவறான மருத்துவத்தால் அடக்கியதாலும், அல்லது வேறு முறைகளால் அது தோலில் இருந்து மறைந்து விடுமாறு செய்வதாலும் – (அதைத்தவிர) பிறவகையில் நல்ல உடல்நலம் வாய்க்கப் பெற்ற அத்தகையவர்களிடம் அதே வகையான (தோல் எழும்புதல்) அல்லது அதற்கு ஒத்த அறிகுறிகளுடன் அது மீண்டும் தோன்றுவது உறுதிப்பட்டுள்ளது.
– மாமேதை ஆனிமான் (பக்கம் 26)

மிகப்பல நெடுநோய்களுக்கும் – மிகப் பேரளவான நிலையில், அடிப்படையாய் விளங்குவது இச் சொறி நோயே ஆகும். அந் நெடுநோய்களுள் ஒவ்வொன்றும் பிறவற்றுடன் தலையாய முறையில் வேறுபட்டுள்ளவை போல் காணப்பட்ட போதிலும், உண்மையில் அவை எப்படி வேறுபட்டவை அல்ல.
மாமேதை ஆனிமான் (பக்கம் 32)

நமக்குத் தெரிந்தவரை, சொறியனே மிகப்பழமை வாய்ந்த நோய்மூலச் சார்பு நெடுநோய் ஆகும். அது பறங்கிப்புண் நோயையும், வெட்டை மருநோயையும் போலவே மிக்க சலிப்பை உண்டாக்குவது; ஆகவே அதை முழுமையாய்க் குணப்படுத்தினாலன்றி, மிக நீண்ட வாழ்நாளைக் கொண்ட மாந்தர் தம் கடைசி மூச்சு வரை அதை அழிக்க முடியாது. கட்டுடல் வாய்ந்த உடல்வாகுவின் முழுமையான வலிமையினாலும் அச் சொறியனை அழித்துப் போக்கமுடியாது.
– மாமேதை ஆனிமான் (பக்கம் 34)

ஓமியோபதி – கொள்கை விளக்கக் கட்டுரைகள்

omiyo_book.PNG

ஓமியோபதி – கொள்கை விளக்கக் கட்டுரைகள்
ஆசிரியர்  : மரு. கு. பூங்காவனம்

பக்கங்கள் : 94
விலை : உரு.60
வெளியீடு : தாமரை பதிப்பகம், சென்னை. தொலைபேசி : 044-26258410

ஓமியோ முரசு இதழில் வெளி வந்த நூல் மதிப்புரை

ஓமியோபதி மருத்துவம் எவ்வளவு எளிமையானதோ, அந்த அளவிற்கு கடுமையானதும் ஆகும். அதாவது, இம்மருத்துவத்தின் தத்துவங்களை சரியாகப் புரிந்து கொண்டால் மிக எளிமையாகவே இருக்கும். இந்த தத்துவங்களை ஆங்கிலத்தில் படிக்கும் போது, அம்மொழியை நன்கு தெரிந்தவர்களே தடுமாறித்தான் போகிறார்கள்.
இதை நிவர்த்தி செய்யும் வகையில், ஓமியோபதி கொள்கை விளக்கக் கட்டுரைகள் நூலை எழுதியிருக்கிறார் மரு.கு. பூங்காவனம். இவர் சிறந்த தமிழ்ப் பற்றாளர் என்கிற வகையில், ஆர்கனானில் கூறப்பட்டிருக்கும் தத்தவங்களை, மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், அழகான தமிழ் நடையில் இந்நூலை எழுதியிருக்கிறார்.
குறிப்பாக, பிற மொழி – ஆங்கில – கலப்பில்லாமல் இந்நூல் எழுதப் பட்டிருப்பது தனிச்சிறப்பாகும். அனைவரும் படிக்க வேண்டிய அவசியமான நூல்.
ஆசிரியரின் வார்த்தைகளில் :
ஓமியோபதியர் ஒவ்வொருவரும் ஓமியோபதி மருந்தியல் நெறிமுறை என்னும் மாபெரும் கலைக்கூடத்திற்குள் சென்றும், ஆங்குள்ள அரும் பொருள்களைக் கண்டறிந்து வியந்தும் மகிழ்ந்தும் இன்புறுதல் வேண்டும். அதற்கான படிக்கட்டுகளாக அமைந்தவையே இதிற் காணப்படும் இருபத்து மூன்று குறுங்கட்டுரைகள்.

ஹோமியோ முரசு – ஜுலை – 2013

 

நூலின் சில பகுதிகள் தொகுத்தளித்தவர் : திருமதி. விசயா கோவர்த்தனன்

எது இயற்கை மருத்துவம் ?
(Natural Laws and Homeopathy)

இயற்கை விதிகள் மாறாதவை, செயற்கை விதிகள் இடத்துக்கு இடம், காலத்துக்கு காலம் தேவைக்கேற்ப என மாற்றம்பெறுபவை. இக் கோட்பாட்டை  ஆராயும் போது உலகில் உள்ள மருத்துவ முறைகளில் ஒன்று மட்டுமே இயற்கை மருத்துவம் என்று குறிக்கத்தக்கதாக உள்ளது. அது, ஓமியோபதி மருத்துவம் மட்டுமே யாகும்.

இயற்கை கற்பிக்கும் பாடம் :-

ஏற்கனவே உள்ள ஒரு நோயும், அதற்கு ஒத்ததாகவும் அதைவிட வலிமையானதாகவும் உள்ள ஒரு நோயும் ஆகிய ஒத்த நோய்கள் இரண்டும் ஒரே நேரத்தில் உடம்பியக்கத்தில் இணையும் போது அதன் விளைவு முற்றிலும் வேறாகக் காணப்படுகின்றது. அத்தகைய நிலையில் இயற்கையின் செயல் முறைகளால் நோய் குணமாக்கப்படும் நிலையை நாம் காண்கின்றோம். ஆதலால் மாந்தராகிய நாமும் (அவ் இயற்கை முறையைப் பின்பற்றி) எவ்வாறு குணப்படுத்த முனைதல் வேண்டும் என்றும் பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம். (நெறி – 43)

நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வருவேன்
(Cause and Effect)

“சிங்கோனா” மருந்து கசப்புச் சுவையுடையதாய் இருப்பதால் அது மலை(மலேரியா)க் காய்ச்சலைப் போக்குகிறது என்று காரணம் ஆகாத ஒன்றை காரணமாகக் கூறியதை திருத்த முற்பட்டதன் விளைவே ஓமியோபதி தோற்றத்திற்கு மூலமாக அமைந்தது. எனவே, காரண காரியப் பெற்றோர்க்கு பிறந்த குழந்தையே ஓமியோபதி! அதன் ஒவ்வொரு உட்கூறும் காரண காரிய தொடர்புடையது. சான்றாக சில;

1. ஆவி வடிவு போன்ற (Spirit like) ஆற்றலைக் கொண்டது நோய்
– இது காரணம்
எனவே, ஆவி வடிவு போன்ற நிலையில உள்ள உயிராற்றலை அது
பற்றிப் பாதிக்கிறது – இது காரியம்

2. ஆவி வடிவுபோன்ற ஆற்றலைக் கொண்டது நோய் – மீண்டும் இது காரணம்
எனவே, அதற்கு ஒத்ததும், அதனினும் வலிமையானதும், ஆவி வடிவானதும் ஆகிய மருந்தே அந்நோயை முற்றாக அழித்து ஒழிக்கிறது – இது காரியம்

3. மருந்துப் பொருளில் நோயை உண்டாக்கும் ஆற்றல் உள்ளார்ந்து
கிடக்கிறது – இது காரணம்.
அதனால் அது, அதற்கு ஒத்துள்ள நோயைப் போக்குகிறது – இது
காரியம்

இவை தொடர்பான நெறிமுறைகள் – 9, 11, 16, 21, 22 ஆகியவை.

உயிராற்றல் பற்றிய உண்மை விளக்கம்
(The Vital Force)

ஓமியோபதியின் அடிப்படைக் கருத்துகளில் ஒன்றாகிய உயிராற்றல் பற்றி உண்மையானதும் அறிவுக்குப் பொருந்துவதும் ஆகிய விளக்கம் வேண்டப்படுகின்றது. இவ் விளக்கத்தை பின்கண்டவாறு நான்கு நிலைகளில் காணலாம். அவை:

முதல்நிலை விளக்கம் – உடம்பை இயக்கும் உயிராற்றல்

இரண்டாம் நிலை விளக்கம் – உயிராற்றலும் அண்டப் பேராற்றலும்

மூன்றாம் நிலை விளக்கம் – உயிராற்றலும் மன ஆற்றலும்

நான்காம் நிலை விளக்கம் – உயிராற்றலால் நோயைக் குணப்படுத்துதல்

இந்நூலில் பக்கம் 9, 10, 11, 12களில் விளக்கமளித்துள்ளார்.

அதோடு –

  • உயிராற்றலின் பாதிப்பே நோய் (நெறி : 11) என்றும்
  •  உயிராற்றலின் மீட்சியே நலம் (நெறி : 12) என்றும்
  •  உயிராற்றலும் உடலும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத தொடர்புடையவை (நெறி : 15) என்றும்
  • உயிராற்றலின் எதிர்வினைச் செயலால் நோய் குணமாகிறது  (நெறி : 62-67) என்றும்;

கூறியதோடு, உயிராற்றலின் பிற செயல்பாடுகளையும் மாமேதை ஆனிமான் ஆங்காங்கே சுட்டிக் காட்டியுள்ளார்.

வாய்ப்பேச்சை அறிவது போலவே நோய்ப் பேச்சையும் அறிய வேண்டும்
(Knowing the Symptoms)

வாயுள்ளவன் பேசக்கடவன் – என்பது அறியப்பட்டதே ஆயின், நோய்களும் பேசுகின்றன! என்கிறார் மருத்துவ மாமேதை சாமுவேல் ஆனிமான். அந்நோய்ப் பேச்சு மொழியைக் குறி என்றும் அறிகுறி என்றும் அவர் கூறினார். பக்கம் 17, 18, 19, 20 இந்நூலில் விளக்கம் உள்ளது.

ஒரு கணினிப் பொறியாளர் கற்றுக் கொள்ளும் கணினி மொழிகளின் (Computer Language) அறிவுத்திறம் அவரை நன்னிலைக்கு உயர்த்துகிறது.

ஓமியோபதியர்கள் தங்களுடைய குணமாக்கற் கலை(Healing Art)யில் வல்லவர்களாய் விளங்குவதற்கு நோய்களின் மொழிகளை குறிகள், அறிகுறிகள் ஆகிய இவற்றின் இயல்புகளை நன்றாகப் புரிந்து கொள்ளும் வல்லமையுடையவர்களாய்த் திகழ வேண்டுமென்றோ?

ஒதுக்குப்புறம் (இடப்பாதிப்பு நோய்)
(Local disease)

நிறைய மச்சங்கள் இருப்பதால் நலமும் மிகுகின்றது, முதுமையடைவதும் தள்ளி போகின்றது என்னும் செய்தியாக ஓர் ஆங்கில நாளிதழில் வெளியானது. (“More moles means better health, delayed ageing” – The Times of India – dated : 24.11.2010)

ஓமியோபதி மருந்தியல் நெறிமுறை (Organon)யில் (நெறி 201) விளக்கம் கொடுத்துள்ளார்.

நீர் ஒட்டம் தடைப்படக் கூடாது என்பதற்காக, அங்கு அடித்து வரப்பட்ட மரக்கிளைகள் ஒதுக்கப்படுகின்றன – இயற்கையான செயல்பாடு.

அகப்பாதிப்பு நோய் துன்பம் பெருகாமல் இருக்குமாறும் இன்றியமையாத உடற்பகுதிகளுக்குக் காப்பு அளிக்குமாறும் அந்நோயின் ஒரு பகுதி புறப் பாதிப்பாக ஒதுக்கப் படுகிறது. இது உடலியக்கச் செயல்பாடு.

மச்சங்களாகி பெருகிய மடை மாற்றத்தால் நோய் பாதிப்பும் குறைகிறது. வாழ்நாளும் நீள்கிறது. – இது இலண்டன் மாநகர் அரசர் கல்லூரி ஆய்வுக் குழுவினரின் முடிவு, இவை அனைத்துக்கும் விளக்கமாய் அமைந்ததே இவ் ஓமியோபதி நெறிமொழி (Organon)

இத்தனை சிறிய உருண்டை போதுமா?
(Minimum Dose)

பொருத்தமான ஓமியோபதி மருந்துகள் குணமாக்கும் செயலை எவ்வாறு தூண்டுகின்றன என்பது புரிந்தவுடன் அத்தகைய ஐயம் தோன்றாது.

ஏனைய மருத்துவமுறை மருந்துகள் எல்லாம் உணவைப் போல உட் கொள்ளப்பட்டு செரிமானமாகும் நிலையில் தான் அவை செயல்படுகின்றன. ஆனால் ஓமியோபதி மருந்தோ, உணர்ச்சி நரம்பைத் தொட்டவுடனயே அதன் தூண்டுணர்வு தொடங்கி விடுகிறது என விளக்குகின்றார் மாமேதை ஆனிமான் என்று அதன் நெறிமுறைகளை 272, 284, 285, இந்நூலில் மருத்துவர் பூங்காவனம் ஐயா அவர்கள் எழுதியுள்ளார்.

பேச தெரிந்தால் போதாது, படிக்கத் தெரிந்தால் போதாது எழுதிக் காப்பதே இன்றியமையாதது.
(Case Record)

ஓமியோபதியில் நோய்க்குறிப்புகளை நுணுக்கமாகவும் விரிவாகவும் சரிநுட்ப (Accurate)மாகவும் எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தும் சில நெறிமொழிகள் கூறப்பட்டுள்ளன. செயற்கை நோய்க் குறிப்பையும், இயற்கை நோய்க்குறிப்பை எழுதும் முறையும் நெறி எண்களை அனைத்தும் கொடுத்து விளக்கியதோடு நோய்க்குறிப்பில், மிக இன்றியமையாத ஒரு சிறு அறிகுறி விடுபட்டாலும் அங்கே நோய் குணமாவது தள்ளியும் தப்பியும் போய்விடும் என்பதால், அவ் அவலத்தைத் தவிர்பபதற்காகவே நோய்க் குறிப்பை எழுத வேண்டும். அதையும் மிகச் சரியாக எழுத வேண்டும் என்பதும் அவ்வாறு எழுதிக் கொள்வதால் உண்டாகும் அளவில்லாத நன்மைகளை வலியுறுத்துவதற்காகவும் இதுபற்றிய விரிவான நெறிமுறைகளை மாமேதை ஆனிமான் எடுத்துரைத்துள்ளார் என்றும் இக் கட்டுரையை பேராசிரியர் மற்றும் மருத்துவர் பூங்காவனம் ஐயா அவர்கள், ஒரு நல்ல மருத்துவம் தமிழ் மக்களுக்கு போய் சேர வேண்டும், பயன் அடைய வேண்டுமென்றும் எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாமல் அயராத உழைப்பும் பெரு முயற்சிக் கொண்டு பல நூல்களை எழுதியுள்ளார் அனைவரும் படித்து பயன்பெற்று நல் உள்ளம் கொண்ட மாமனிதரை வாழ்த்தி போற்றிடுவோமாக.

வீட்டுக்கு வீடு ஓமியோபதி

omiyo_book2.PNGவீட்டுக்கு வீடு ஓமியோபதி

ஆசிரியர் : மரு.கு.பூங்காவனம்
வெளியீடு : வேங்கை பதிப்பகம்,
80 ஏ, மேலமாசிவீதி, மதுரை – 1
94439 62521

மாற்றுமருத்துவம் இதழில் வெளிவத்த நூல் மதிப்புரை

நோயாளிக்கு உடல் நலத்தை மீட்டுத் தருதலே மருத்துவர்தம் உயர்வான ஒரே தொண்டு ஆகும். இதுவே குணப்படுத்துதல் எனப்படும் என்று மாமேதை ஹானிமன் ஹோமியோபதிச் சட்ட நூல்கள் ‘ஆர்கனான்’ முதல் மணிமொழியில் அறிவிக்கிறார். அத்தகைய குணப்படுத்தும் உயர்வான தொண்டாற்றத் தகுதியான ஓர் உன்னத மருத்துவமுறையே ஹோமியோபதி.
உலகின் இரண்டாவது பெரிய மருத்துவமுறை, மாற்று மருத்துவங்களில் நவீனமானதும், அறிவியல் மற்றும் கலை நுட்பங்கள் சார்ந்த அடிப்படைகளை உள்ளடக்கியதுமான மருத்துவமுறை. இதனை வீட்டுக்கு ஒருவரேனும் கற்றுப் பயன் பெற வேண்டும் எனும் உயர் நோக்கோடு மரு.பூங்காவனம் அவர்கள் இந்நூலினை அழகிய தமிழில் இனிய ஆற்றொழுக்கு நடையில் பெரு முயற்சிகளோடு எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ் மொழியில் ஹோமியோபதி நூல்கள் குறைவு; அதிலும் முழுமைப் பயன்பாட்டு நூல்கள் மிகமிகக்குறைவு, எனும் நிலையை மாற்றவும் ஹோமியோபதியை மக்கள் மருத்துவமாகப் பரப்பவும், மாற்று மருத்துவத் துறையில் மறுமலர்ச்சி காணவும் இந்நூல் குறிப்பிடத்தக்க பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.
சுமார் 390 பக்கங்கள் கொண்ட இந்நூலைப் பயில்வோர் ஹோமியோபதியின் முழுப் பரிமாணங்களையும், ஆழ அகலங்களையும், நலமாக்கும் ஆற்றல்களையும் அறிந்து பயன்படமுடியும். ஹோமியோபதியின் தோற்றம் முதல், அதன் கொள்கைகள், நோய்நாடலின் உத்திகள், 60 மருந்துகளின் குண விளக்கங்கள். ‘12 TISSUE REMEDIES’ எனப்படும் தாது உப்பு மருந்துகளின் குண விளக்கங்கள் பயன்பாடுகள், பாச்மலர் மருத்துவம் குறித்து சுருக்கமான செய்திகள், அருமையான ஹோமியோபதி முதலுதவிக் குறிப்புகள் இவற்றுடன் உடலியல் உடலியங்கியல் கட்டுரைகள் என ஹோமியோபதியர்களுக்கும், மாற்று மருத்துவர்களுக்கும் பயன்மிகு கல்வி தரும் பல்வேறு அம்சங்கள் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஹோமியோபதி மருத்துவம் குடும்பக்கலைகாரர் ஒன்றாகத் திகழ்ந்து நாடு தழுவிய நன்மைகளைப் பரப்ப வேண்டும் எனும் நன்னோக்குடன் எழுதப்பட்டுள்ள இந்நூலை நோய்களிலிருந்து நிவாரணம் பெறப் பெருந்தொகையும், நேரமும், ஆற்றலும் செலவிட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சமுதாயத்தின் அனைத்துப் பகுதியினரும் வாங்கிப் படித்து ஹோமியோபதியின் பயனறிந்து குடும்ப ஆரோக்கியத்தின் அடிப்படைகளை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாற்றுமருத்துவம் – இருமாத இதழ் மார்ச் – ஏப்ரல் 2014

இந்நூலை இங்கேயே நீங்கள் படிக்கலாம்
 

பதிவிறக்கம் செய்ய வேண்டுமானால் இங்கே சொடுக்கவும்